மே 14க்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல்.. தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட கோரி திமுக வழக்கு தொடுத்தது.
TN Civic Elections should be conducted before May 14: Chennai High court
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-civic-elections-should-be-conducted-before-may-14-chennai-high-court-274801.html

0 Response to மே 14க்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல்.. தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

Post a Comment

Recent Posts