சென்னை: சட்டசபையில் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 'தலைகளை' எண்ணும் நடைமுறைதான் பின்பற்றப்பட இருக்கிறது. முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டசபை கூடுகிறது. சட்டசபை நாளை காலை 11 மணிக்கு கூடியதும் முதலில் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தமது அரசின் மீதான நம்பிக்கை கோரி தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றுவார். அப்போது தமது அரசுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/how-trust-vote-conduct-tn-assembly-274380.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/how-trust-vote-conduct-tn-assembly-274380.html
0 Response to சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது "தலைகள்" எண்ணும் நடைமுறை பின்பற்றப்படும்
Post a Comment