சிறை செல்வதற்கு முன்.. கூடி நின்று கதறி அழுத சசிகலா குடும்பம்!

சரணடைவதற்காக பெங்களூரு செல்வதற்கு முன்னர், சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி என மன்னார்குடி குடும்ப உறுப்பினர் அனைவரும் கும்பலாக உட்கார்ந்து கதறி அழுதனர்.

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா நீதிமன்றத்தில் சரணடைய இன்று பெங்களூரு புறப்பட்டார். 1991-1996 ஆகிய காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, கூவத்தூரில் தங்கியிருந்த சசிகலா நேற்று இரவு போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்திற்கு வந்தார். பின்னர், சரணடைய கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கால அவகாசம் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
குவிந்த மன்னார்குடியினர்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-weeps-with-family-member-before-leaving/slider-pf222030-274175.html

0 Response to சிறை செல்வதற்கு முன்.. கூடி நின்று கதறி அழுத சசிகலா குடும்பம்!

Post a Comment

Recent Posts