சென்னை: சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதைக் கண்டித்து மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியலில் முதல்வர் நாற்காலி யாருக்கு என கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த மோதல் நேற்று தற்காலிக முடிவை எட்டியுள்ளது. சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவை நாளை சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் சசிகலா தலைமையிலாள ஆளும் அதிமுகவின் ஆட்சிக் கவிழும் வாய்ப்புள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/lots-police-have-deployed-chennai-marina-beach-274366.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/lots-police-have-deployed-chennai-marina-beach-274366.html
0 Response to எடப்பாடியாருக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் புரட்சிப்போல் மக்கள் போராட்டம்? மெரினாவில் போலீஸ் குவிப்பு
Post a Comment