இரட்டை இலைச்சின்னத்தை முடக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக எம்பிக்கள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர்.
சென்னை: இரட்டை இலைச்சின்னத்தை முடக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக எம்பிக்கள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுதுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அதிமுக இரண்டாக உடைந்து ஓபிஎஸ் அணி சசிகலா அணி என பிரிந்துள்ளது. சசி குரூப் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றியுள்ள நிலையில் கட்சியை காப்பாற்ற முனைப்பு காட்டி வரும் ஓபிஎஸ் அணி , சசிகலா குடும்பம் இரட்டை இலை சின்னத்தை தேர்தலில் பயன்படுத்தி விடக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி மனு அளித்துள்ளனர். பல பொது தேர்தல்களையும் இடைத்தேர்தல்களையும் கண்ட அதிமுகவின் வெற்றிச்சின்னமான இரட்டை இலை உருவானது எப்படி என்பது குறித்த தகவல்கள்..
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-double-leaf-symbol-will-be-disabled-274315.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-double-leaf-symbol-will-be-disabled-274315.html
0 Response to இரட்டை இலை சின்னம்... ஜெ அணி, ஜா அணி மோதலுக்குப் பின் மீண்டும் முடக்கப்படுமா?
Post a Comment