இனியும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என இலங்கையை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: இனியும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என இலங்கையை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். உடனடியாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை டெல்லிக்கு அழைத்து, மீனவர் படுகொலைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற 22 வயது இளைஞர் கொல்லப்பட்டார்.
இலங்கை கடற்படையின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் சிங்கள கடற்படையின் அத்துமீறளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 Response to தாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.. இலங்கையை எச்சரிக்க அன்புமணி வலியுறுத்தல்
Post a Comment