என் சமாதிக்கு யார் வந்தாலும் நாசமா போவாங்க...ஜெ. கனவில் சொன்னதாக பீதி கிளப்பும் ஆர்கே நகர் வேட்பாளர்

தம்முடைய சமாதிக்கு யார் வந்தாலும் நாசமாக போவார்கள்; தமது ஆவி இப்போது எம்ஜிஆர் சமாதியில் இருக்கிறது என ஜெயலலிதா கனவில் சொன்னதாக கூறிவருகிறார் எம்ஜிஆர் நம்பி எனும் ஆர்கே நகர் வேட்பாளர்.
ஜெ. கல்லறைக்கு போகலையே
சென்னை: தம்முடைய சமாதிக்கு யார் வந்தாலும் நாசமாகத்தான் போவார்கள் என்று ஜெயலலிதா கனவில் தம்மிடம் கூறியதாக காமெடி செய்து கொண்டிருக்கிறார் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் எம்ஜிஆர் நம்பி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை போன்ற டூப்ளிகேட்டுகளும் தீபாவை போன்ற ஒரிஜனல் வாரிசுகளும் புற்றீசலைப் போல கிளம்பிவிட்டன. ஜெயலலிதாவின் மகன், மகள் என்றெல்லாம் கூட கிளம்பிவிட்டார்கள். இந்த வரிசையில் எம்ஜிஆர் என்னை படிக்க வைத்தார்...எங்க பார்த்தாலும் ஜெயலலிதா என்னிடம் பேசுவார் என பில்டப்புகளுடன் வந்திருக்கும் புதியவர்தான் எம்.ஜி.ஆர். நம்பி. இவர் தற்போது அனைத்திந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தைத் தொடங்கி ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரம்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayakallithaa-s-ghost-now-with-mgr-277748.html

0 Response to என் சமாதிக்கு யார் வந்தாலும் நாசமா போவாங்க...ஜெ. கனவில் சொன்னதாக பீதி கிளப்பும் ஆர்கே நகர் வேட்பாளர்

Post a Comment

Recent Posts