தமிழக மீனவர் சுட்டுக்கொலை.. விசாரணைக்கு இலங்கை கடற்படை உத்தரவு

கண்டனங்கள் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், நடந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு: தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன் என்பவர் கையில் காயம் ஏற்பட்டது.

Read more at: http://tamil.oneindia.com/news/srilanka/sri-lankan-navy-orders-probe-into-indian-fisherman-s-death-276112.html

0 Response to தமிழக மீனவர் சுட்டுக்கொலை.. விசாரணைக்கு இலங்கை கடற்படை உத்தரவு

Post a Comment

Recent Posts