ஆர்.கே நகரில் சூடுபிடிக்கும் வாட்ஸ் ஆப் பிரச்சாரம்!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் வாட்ஸ்அப் மூலமான பிரசாரம் களை கட்டியுள்ளது. தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் ஆதரவாளர்களும், அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி வேட்பாளரான மதுசூதனனும் இத்தகைய பிரசாரத்தில் முன்னணியில் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து, வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, அவரது அணி சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 'ஓ.பி.எஸ். டீம்' என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுக்கள் ஒன்று முதல் பத்து வரை ஆரம்பிக்கப்பட்டு, பிரசார களத்தில் தீவிரமாக இறங்கி விட்டது ஓ.பி.எஸ் அணி. வடசென்னை மாவட்ட ஜெ. ஜெயலலிதா பேரவைச் செயலாளரான ஆர்.எஸ். ராஜேஷ், சுமார் 100 வாட்ஸ்அப் குழுக்களைத் தொடங்கி, அவற்றில் பத்து குழுவுக்கு அவரே குரூப் நிர்வகிப்பாளராக உள்ளார்.

0 Response to ஆர்.கே நகரில் சூடுபிடிக்கும் வாட்ஸ் ஆப் பிரச்சாரம்!

Post a Comment

Recent Posts