சென்னை: சென்னையில் 2 மணிநேர இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஞாயிறு இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றும் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக சென்னையில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகரிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/another-spell-rain-hits-chennai/articlecontent-pf270855-300310.html
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/another-spell-rain-hits-chennai/articlecontent-pf270855-300310.html
0 Response to தெளிய விட்டு தெளிய விட்டு அடிக்கும் மழை.... சென்னையில் வடியாத வெள்ளம்
Post a Comment