சென்னை: சசிகலா தரப்பில் போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலை உறுதியாகி வருகிறது. காங்கிரஸ் தரப்பின் ஆதரவைப் பெற சசிகலா தரப்பு தீவிரமாக முயன்று வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபையில் 8 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவைப் பெற்று தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள சசிகலா குரூப் தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த முயற்சி பலிக்குமா என்பதுதான் தெரியவில்லை. முன்னதாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அங்கு போய் சசிகலாவை சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/will-tncc-help-sasikala-form-the-govt-273684.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/will-tncc-help-sasikala-form-the-govt-273684.html
0 Response to திடீர் திருப்பம்... காங்கிரஸ் ஆதரவைப் பெற களம் குதித்த சசிகலா குரூப்..!
Post a Comment