சென்னை: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நேற்று பி.எச்.பாண்டியனும், அவரது மகன் மனோஜ் பாண்டியனும் பச்சையாகவே இது திட்டமிட்ட மரணம் என்று கூறி விட்டனர். மறைமுகமாக சசிகலா குடும்பத்தையும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனாலும் இதற்கு சசிகலா குடும்பத்திலிருந்து எந்த வலுவான பதிலும் வரவில்லை. விரைவில் பெரிய குண்டை எடுத்து ஓ.பி.எஸ் அணி வீசும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் வரையிலும் கூடவே இருந்தவர்தான் ஓ.பி.எஸ். சசிகலா கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்தபோதும் அவர் கூடவேதான் இருந்தார். முதல்வர் பதவியில் அமரப் போகிறார் சசிகலா என்ற செய்தி வந்த போதும் கூட கூடவேதான் இருந்தார். ஆனால் அப்போதெல்லாம் எதுவும் பேசாத ஓ.பி.எஸ். தற்போது அடுத்தடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிரடி காட்டி வருகிறார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/will-team-ops-reveal-the-big-catch-next-275705.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/will-team-ops-reveal-the-big-catch-next-275705.html
0 Response to ஜெ. மரணம்.. விரைவில் பெரிய "குண்டை" வீச தயாராகிறது ஓ.பி.எஸ் அதிமுக?
Post a Comment