சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: என்னுடைய அரசியல் வாழ்க்கையில் தவறு செய்ததாக ஒருபோதும் பெயர் வாங்கியதில்லை. இப்போது புதிதாக அவர்கள் ஒரு புரளியை சொல்லி வருகிறார்கள். காலம்தான் உரிய பதில் சொல்லும். சட்டசபை கூடியபிறகு எனக்கு உள்ள ஆதரவை எம்.எல்.ஏக்கள் நிரூபிப்பார்கள். ராஜினாமாவை திரும்ப பெற கட்டாய சூழல் ஏற்பட்டால் திரும்ப பெறுவேன். எம்ஜிஆர் எதற்காக அதிமுகவை நிறுவினாரோ, ஜெயலலிதா 16 ஆண்டுகாலம் முதல்வராக இருந்து சிறப்பான ஆட்சியை, ஏழை எளிய மக்களுக்கு திட்டங்களை கொண்டு போய் சேர்த்தார். அந்த வழியில்தான் நானும் ஆட்சி நடத்தினேன். இருமுறை சோதனை ஏற்பட்ட காலத்தில் நான் முதல்வராக இருந்தேன்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/inquiry-commission-will-be-form-investigate-about-jayalalitha-demiseo-pannerselvam-273573.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/inquiry-commission-will-be-form-investigate-about-jayalalitha-demiseo-pannerselvam-273573.html
0 Response to சசிகலாவுக்கு செக் வைத்த ஓ.பி.எஸ்.. ஜெ. மரணம் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்
Post a Comment