சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தண்ணீர் திறக்க.. காவிரி மேற்பார்வைக்கு ழுவிடம் தமிழகம் வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள தண்ணீர் திறந்து விடுமாறு டெல்லியில் நடந்த காவிரிமேற்பார்வைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் வலியுறுத்தியுள்ளனர்.

டெல்லி: தமிழகம் மற்றும் கர்நாடகா பங்கேற்றுள்ள காவிரி மேற்பார்வைக்குழுவின் மாதாந்திர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. தமிழகம் சார்பாக காவிரித்தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நீர்பாசனத்துறை செயலாளர் பங்கேற்றனர். கூட்டத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டப்படி நிலுவையில் உள்ள காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர் கர்நாடக அரசு காவிரியில் உடனடியாக 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, தமிழக அரசு காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Cauvery Supervisory Committee  meet in Delhi
Read more at: http://tamil.oneindia.com/news/india/cauvery-supervisory-committee-meet-delhi-274386.html

0 Response to சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தண்ணீர் திறக்க.. காவிரி மேற்பார்வைக்கு ழுவிடம் தமிழகம் வலியுறுத்தல்

Post a Comment

Recent Posts