ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அப்படி என்ன சிக்கல்?.. என்ன சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்!

சென்னை : சென்னையில் நீர்வழிப்பாதைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஜனநாயக ரீதியில் பல்வேறு சிக்கல் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் மழை நீர் பாதித்த பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி கடந்த 5 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை சமன் செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்தலாமா என்று அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
Minister Sengottaiyan says that there is some difficulties in removing enccroahments
மழைநீர் வேடியாமல் இருப்பதற்கு ஆக்கிரமிப்புகள் காரணம் என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஜனநாயக ரீதியில் பல்வேறு சிக்கல் உள்ளது. மழை பாதிப்புகளை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் இருந்தாலும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 Response to ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அப்படி என்ன சிக்கல்?.. என்ன சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்!

Post a Comment

Recent Posts