பொதுச் செயலாளரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.. முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.. சுப.வீ

பொதுச் செயலாளரை அதிமுகவினர் தேர்ந்தெடுத்துக் கொள்வது அவர்களது உரிமை; ஆனால் முதல்வரை தமிழக மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
Suba. Veerapandian demands Assembly election
சென்னை: முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கே இருப்பதால், உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். இதுகுறித்து சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் பொதுக்குழு சசிகலாவைத் தங்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது. அக்கட்சியில் அப்பொறுப்பே மிகுந்த வல்லமை உடையது. இது அக்கட்சியின் உள் விவகாரம் என்று விலகி நிற்க முடியாது. ஏனெனில் அக்கட்சி இன்று தமிழகத்தின் ஆளுங்கட்சியாகவும் உள்ளது. அதனால் அடுத்த முதலமைச்சர் பொறுப்பிற்கும் அவருடைய பெயர் முன்மொழியப் படலாம். அவ்வாறு இல்லையெனினும், முதலமைச்சரையும் கட்டுப்பத்தும் அதிகாரம் அப்பதவிக்கு உண்டு. 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/suba-veerapandian-demands-assembly-election-270798.html

0 Response to பொதுச் செயலாளரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.. முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.. சுப.வீ

Post a Comment

Recent Posts