ஜெயலலிதா மரணத்தில் மர்மம்… முதல்வர் விளக்கம் அளிக்க ஸ்டாலின் கோரிக்கை!

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.மரணத்தில் சந்தேகம்
சென்னை: தமிழகத்தின் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார். 70 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து காரத்தே மாஸ்டர் ஹுசைனி போன்றவர்களும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறினார்கள். இந்நிலையில், நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தனிப்பட்ட வகையில் தனக்கும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருத்து தெரிவித்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை எழுந்து வருவதால் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு உள்ளது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/m-k-stalin-demands-reports-on-jayalalithaa-s-death-270803.html

0 Response to ஜெயலலிதா மரணத்தில் மர்மம்… முதல்வர் விளக்கம் அளிக்க ஸ்டாலின் கோரிக்கை!

Post a Comment

Recent Posts