சென்னை: பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக, அதிமுக பொதுச்செயலர் சசிகலா அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் சென்று கொண்டுள்ளார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார். சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்தனர். முன்னதாக சசிகலா போயஸ் இல்லத்தில் வைத்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தினார். பிறகு ராமாவரத்தில் எம்.ஜிஆர். இல்லத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-ilavarasi-both-are-travel-a-same-car-bengaluru-274158.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-ilavarasi-both-are-travel-a-same-car-bengaluru-274158.html
0 Response to பரப்பன அக்ரஹாரா வந்தடைந்தார் சசிகலா.. நீதிமன்றத்தில் சரண்! சில நிமிடங்களில் சிறையில் அடைப்பு
Post a Comment