மக்களை சந்தித்துவிட்டு வந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கட்டும்.. சட்டசபையில் ஓ.பி.எஸ்

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களிடம் கருத்து கேட்டுவிட்டு வந்து ஓட்டு போட அவகாசம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது ஓ.பி.எஸ் பேசுகையில், கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டதை மக்கள் அறிந்து வைத்துள்ளனர். எனவே அவர்களை உடனடியாக வாக்களிக்க அனுமதிக்க கூடாது. மக்களின் குரல் பேரவையில் எதிரொலிக்க வேண்டும். எனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் அவரவர் தொகுதிகளுக்கு சென்று மக்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டும். மக்களிடம் கருத்துக்களை கேட்ட பிறகு மற்றொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம். இவ்வாறு ஓபிஎஸ் பேசினார். அப்போது சசிகலா தரப்பு எம்.எல்.ஏக்கள் அவரது பேச்சுக்கு இடையூறு செய்து கோஷமிட்டனர்.
O.Pannerselvam asks AIADMK MLAS to meet people
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/o-pannerselvam-asks-aiadmk-mlas-meet-people-274485.html

0 Response to மக்களை சந்தித்துவிட்டு வந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கட்டும்.. சட்டசபையில் ஓ.பி.எஸ்

Post a Comment

Recent Posts