ரூ.10 கோடி மோசடி.. பவர்ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது.. திஹார் போகிறார்!

ரூ. 10 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்தனர்.

சென்னை: 1000 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி 10 கோடி ரூபாய் கமிஷன் வாங்கிக் கொண்டு மோசடி செய்த வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி பொருளாதாரா குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கோடிக்கணக்கில் கடன் வாங்கித்தர லட்சக்கணக்கில் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் என்பது பவர்ஸ்டார் சீனிவாசன் மீதான புகார். ஆந்திரா தொழிலதிபர் ஒருவருக்கு 20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து புகார்கள் வரவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சீனிவாசன் மீது 6 வழக்குகள் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
Actor Power Star Srinivasan, was arrested by Delhi Police on Monday.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-power-star-srinivasan-was-arrested-delhi-police-on-monday-276122.html

0 Response to ரூ.10 கோடி மோசடி.. பவர்ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது.. திஹார் போகிறார்!

Post a Comment

Recent Posts