மோடிக்கும் சுஷ்மாவுக்கும் அப்படி என்ன தலை போகிற வேலை.. கொதிக்கும் மக்கள்

தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டத குறித்து பிரதமர் மோடியோ சுஷ்மா சுவராஜோ இதுவரை வாய்திறக்கவில்லை.
சென்னை: தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டத குறித்து பிரதமர் மோடியோ சுஷ்மா சுவராஜோ இதுவரை வாய்திறக்கவில்லை. நாட்டில் நடந்துள்ள ஒரு பிரச்சனைக்கு கூட வாய்திறக்காமல் அப்படி என்னதான் செய்கிறது மத்திய அரசு என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த 22 வயது மீனவர்கள் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள கடற்படையைக் கண்டித்து மீனவ கிராமங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-sushma-not-opens-their-mouth-on-tn-fishermen-murder/slider-pf225113-276126.html

0 Response to மோடிக்கும் சுஷ்மாவுக்கும் அப்படி என்ன தலை போகிற வேலை.. கொதிக்கும் மக்கள்

Post a Comment

Recent Posts