சென்னை: விவசாயிகளுக்கு 2,247 கோடி ரூபாய் பயிர் இழப்பு வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை கிடைக்கப்பெறும். ஆனால், நடப்பு ஆண்டில் 168.03 மி.மீ, மழையே கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த 140 ஆண்டுகளில் இது போன்ற குறைந்த மழையளவை தமிழ்நாடு சந்தித்தில்லை. இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/edappadi-palanichami-ordered-releasing-r-s-2-247-crores-farmers-274803.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/edappadi-palanichami-ordered-releasing-r-s-2-247-crores-farmers-274803.html
0 Response to விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
Post a Comment